திலக் [இயற்பெயர் திலக் ராஜ் என்ற திலக்ஜி] மேஜர் சுந்தரராஜனின் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படமான “கல்தூண்” படத்தில் சிவாஜிகணேசன் -கே.ஆர்.விஜயா தம்பதியரின் இரண்டு மகன்களில் ஒருவராக வந்து வில்லத்தனத்தின் உச்சமாக நடித்திருப்பவர் என்பது அப்படத்தைக் கண்டுகளித்தவர்களுக்கு நினைவுக்கு வரலாம். இவர் டைகர் தாத்தாச்சாரி, பேர் சொல்ல ஒரு பிள்ளை, தாயில்லா குழந்தை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, வேலை கிடைச்சிருச்சு, அதிகாரி, கை நாட்டு, வெள்ளிக்கிழமை விரதம் [1974], ஆறிலிருந்து அறுபது வரை [1979] போன்ற 70 படங்களில் நடித்துள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ரி.கே.பகவதியின் மகனாக இவர் நடித்திருப்பார். ரஜினிகாந்திடம் மிகக் கடுமையாக இவர் நடந்துகொள்ளும்போது ரஜினிகாந்தின் மீது ரசிகர்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தும்.
ஏவி.எம்.ஸ்டூடியோவில் உதவி எடிட்டராக பணியாற்றும் இவர் 24 படங்களுக்கு உதவி எடிட்டராக பணிபுரிந்துள்ளார். 55 ஆண்டுகளாக திரைத்துறையிலிருப்பவர்.
இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்களில் துடுக்குத்தனம் நிறைந்த வில்லத்தனமான கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளார். இவர் மேஜர் சுந்தரராஜனின் நாடக்குழுவில் நடித்து வந்தவர். 05.04.1943 அன்று பிறந்த இவருக்குத் தற்போது 71.
ஆறிலிருந்து அறுபது வரை [1979] படத்தில் திலக்
வெள்ளிக்கிழமை விரதம் [1974] படத்தில் தனித்தும் ஸ்ரீகாந்துடனும் திலக்
”அபூர்வ ராகங்கள்” 1975 படத்தில் கமலஹாசனுடன் திலக்
”ஆவதெல்லாம் பெண்ணாலே” 1990 படத்தில் எஸ்.வி.சேகருடன் திலக்
”ஆவதெல்லாம் பெண்ணாலே” 1990 படத்தில் திலக்குடன் விஜி
’பேர் சொல்லும் பிள்ளை’ 1976 படத்தில் பெரியார் ராஜவேலுவுடன் திலக்
’பேர் சொல்லும் பிள்ளை’ 1976 படத்தில் செந்தாமரையுடன் திலக்
வேலை கிடைச்சிருச்சி [1990] படத்தில் கல்தூண் திலக்ஜி
now he is acting in tamil tv serials
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி திரு.கே.எஸ்.மணி.
He passed away yesterday
https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/veteran-actor-thilak-passes-away-battling-covid-19/articleshow/82452472.cms