S.M.ராமநாதன் (கண் திறந்தது ராமநாதன்)
இவர் பிரபல நகைச்சுவை நடிகை மனோரமாவின் கணவர். இவர் கதாநாயகனாக அறிமுகமான படம் கண் திறந்தது. இப்படம் 1959-இல் வெளிவந்தது. அதனால் கண் திறந்தது ராமநாதன் என்றே குறிப்பிடப்பட்டு வந்தார். தேடி வந்த லட்சுமி உள்ளிட்ட பல படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்தன. திரைப்படங்களைக் காட்டிலும் இவர் அதிகமாக நாடகங்களிலேயே நடித்து வந்தார். மனோரமாவைத் திருமணம் செய்தவர் 15 நாட்கள் மட்டுமே அவருடன் வாழ்க்கை நடத்தினார். அதன் பின் தன்னுடன் நாடகங்களில் நடித்து வந்த பங்கஜம் என்பவரை மணந்து கொண்டு அவருடனேயே வாழ்நாள் முழுவதும் வாழ்க்கை நடத்தினார். இவர் 18.12.1990 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது உடல் சென்னை, மந்தைவெளி, ஆதம்ஸ் தெருவிலுள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. ராமநாதனின் உடலைப்பார்த்து அவரது முதல் மனைவியான மனோரமாவும் இரண்டாவது மனைவியான பங்கஜம், மற்றும் ஒரே மகனான பூபதி ஆகியோர் கதறி அழுதனர். 19.12.1990 அன்று ஐ.ஜி.ஆபீஸ் பின்புறமுள்ள இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு மகன் பூபதி தீமூட்டினார்.
கண் திறந்தது (1959) படக்காட்சிகள்
ஏ.கருணாநிதியுடன் ராமநாதன்
பிரண்ட் ராமசாமி மற்றும் ஏ.கருணாநிதியுடன் ராமநாதன்
ஏ.கருணாநிதியுடன் ராமநாதன்
மைனாவதியுடன் (நடிகை பண்டரிபாயின் தங்கை) ராமநாதன்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி ரி.ஏ.மதுரம் மற்றும் மைனாவதியுடன் (நடிகை பண்டரிபாயின் தங்கை) ராமநாதன்
தேடி வந்த லட்சுமி (1973) படத்தில் கே.கண்ணனுடன் ராமநாதன்
கருந்தேழ் கண்ணாயிரம் [1972] படத்தில் கண் திறந்தது ராமனாதன்
“நினைவில் நின்றவள்” [1967] படத்தில் ரவிச்சந்திரன், நாகேஷுடன் ராமனாதன்
“பிள்ளையோ பிள்ளை’’ 1972 படத்தில் மு.க.முத்துவுடன் கண் திறந்தது ராமனாதன்
“பிள்ளையோ பிள்ளை’’ 1972 படத்தில் வசந்தகுமாரு
’முத்துச்சிப்பி’ 1966 படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமனுடன் ராமனாதன்
’முத்துச்சிப்பி’ 1966 படத்தில் ஜெயலலிதா, ஜெய்சங்கருடன் ராமனாதன்
‘பனித்திரை’ 1961 படத்தில் ஜெமினி மகாலிங்கம், சரோஜாதேவியுடன் கண் திறந்தது எஸ்.எம்.ராமனாதன்