சண்முகசுந்தரி– [T.Shunmugasundari] தமிழ்த்திரையுலகில் திறமையான நகைச்சுவை நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் பின்னணிப்பாடகி ரி.கே.கலாவின் தாயார். மாடி வீட்டு மாப்பிள்ளை, லட்சுமி கல்யாணம்,’ ‘வடிவுக்கு வளைகாப்பு’, கணவன், என் அண்ணன், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் போன்ற எழுநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். Continue reading
Daily Archives: September 9, 2013
N.S.Nadarajan
என்.எஸ்.நடராஜன் – 500 -க்கும் மேற்பட்ட தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர்.
வில்லன் என்பவன் யார்? ஒரு திரைக்கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தின் கெட்ட நடவடிக்கைகள் அல்லது எண்ணங்கள் தான் வில்லன் என்கிறது அகராதி. அனைவருக்கும் ஒரு ஹீரோ கதாபாத்திரம் பிடிக்கும். ஆனால் யாரும் மறக்க முடியாத கதாபாத்திரம் வில்லனுடையது. அதனால் தான், பல திரைக்கதைகளின் வில்லன் கதாபாத்திரம் நம் ஆழ் மனத்தில் தங்கி விடுகிறது. பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்கள் நம்மை பயப்பட வைத்தாலும், படம் முடிந்த பின்பும் நம் மனத்தில் அவர்களின் தாக்கம் கதாநாயகனை விட அதிகம் ஏற்படுத்தின என்பதை மறுக்க முடியாது. Continue reading
Vijayakumari
விஜயகுமாரி ஓர் 1950-களில் நடிக்கத் துவங்கிய தமிழ்த் திரைப்பட நடிகை.பிறமொழி நடிகைகள் தமிழ்த் திரையுலகில் வலம் வந்தபோது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட விஜயகுமாரி பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர்.இவரது முதல் படம் அம்மையப்பன். ஸ்ரீதரின் ” கல்யாண பரிசு Continue reading
M.S.Sundaribhai
எம்.எஸ்.சுந்தரிபாய்-(M.S.Sundaribhai)
தமிழ்த் திரையுலகில் முத்திரைப் பதித்த நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லி நடிகை. 02.03.1923-இல் மதுரையில் பிறந்தவர். ஆர்மோனியம் வாசிப்பார். பல படங்களில் பின்னணி பாடியுமுள்ளார். சுகுண சரஸா படத்தில் நடிப்பதற்காக மதுரையிலிருந்து சென்னை வந்தவர். 1939-இல் இப்படம் வெளியானது. Continue reading
“Sattaampillai” K.N.Venkatraman
”சட்டாம்பிள்ளை” கே.என்.வெங்கட்ராமன்
தமிழ்த் திரையுலகில் பிரபலமான ஓர் நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகர். 11.07.1925-இல் நடேசய்யர்-சுப்புலட்சுமியம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது பிள்ளாக பிறந்தவர்.”கிருஷ்ணன் தூது” என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பிரவேசம். இப்படம் தீப்பிடித்து எரிந்து போனது. அதனால் வாய்ப்புக்கள் ஏதுமின்றி திண்டாடிய போது இவரது திறமையை அறிந்து எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் தாம் நடத்தி வந்த நாடகக்குழுவில் இவரை சேர்த்துக் கொண்டார். எஸ்.ஜி.கிட்டப்பா Continue reading