பி.ஏ.சுப்பையா பிள்ளை – பழம்பெரும் தமிழ் நடிகர். 1949-இல் வெளிவந்த ஏவி.எம்மின் வெற்றிச்சித்திரமான ‘வாழ்க்கை’ படத்தில் எஸ்.ஆர்.ஜானகியின் கணவராகவும் எம்.எஸ்.திரௌபதியின் தந்தையாகவும் பழுத்தப் பழமாக வேலாயுதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அன்றைய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தவர் பி.ஏ.சுப்பையாபிள்ளை.ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரித்து 1943-இல் வெளியாகி மாபெரும் வெற்றிச்சித்திரமான ‘மங்கம்மா சபதம்’ படத்தில் இவர் கதாநாயகி மங்கம்மாவின் [வசுந்தரா] தகப்பனார் வெங்கடாஜலம் என்ற பாத்திரத்தில் ஜொலித்தார். 1948-இல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று உலக சாதனை படைத்த ‘சந்திரலேகா’ என்ற படத்தில் இவர் ரி.ஆர்.ராஜகுமாரியின் தந்தையாக நடித்திருந்தார்.இவர் இழந்த காதல் [1941] என்ற படத்திலும் நடித்திருக்கிறார். (தகவல் திரு.ராண்டார்கை மற்றும் திரு.கணபதி கிருஷ்ணன்). இவரைக்குறித்த மேலதிகத் தகவல் எதுவும் இல்லை.
1949-இல் வெளிவந்து வெற்றிக்கொடி நாட்டிய ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில் பி.ஏ.சுப்பையா பிள்ளை
1949-இல் வெளிவந்து வெற்றிக்கொடி நாட்டிய ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில் எஸ்.ஆர்.ஜானகியுடன் பி.ஏ.சுப்பையா பிள்ளை
1949-இல் வெளிவந்து வெற்றிக்கொடி நாட்டிய ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில் ஃபிரண்ட் ராமசாமியுடன் பி.ஏ.சுப்பையாபிள்ளை
1949-இல் வெளிவந்து வெற்றிக்கொடி நாட்டிய ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில் எம்.எஸ்.திரௌபதியுடன்
‘சந்திரலேகா’ [1948] படத்தில் பி.ஏ.சுப்பையா பிள்ளை தனித்தும் ரி.ஆர்.ராஜகுமாரியுடனும்
மங்கம்மா சபதம் 1943 படத்தில் பி.ஏ.சுப்பையா பிள்ளையுடன் வசுந்தரா தேவி
மங்கம்மா சபதம் 1943 படத்தில் கொளத்து மணியுடன் பி.ஏ.சுப்பையா பிள்ளை
thanku.entha kalathil ulla yarukume old sinima nadikare pathi theriyathu.ana negal podum entha postukalil erunthu epidi ullavagalum sinima ulakathile erunthurukanga entu theriyukirathu.
இவர் இழந்த காதல் (1941) திரை படத்தில் நடித்து உள்ளதாக ராண்டார் கை குறிப்பிட்டு உள்ளார்
மிக்க நன்றி திவ்யா மணிகண்டன். உன்னுடைய கருத்துக்களுக்கும் உன்னுடைய ஆர்வத்திற்கும் மிக்க நன்றி.
நன்றி கணபதி கிருஷ்ணன்.தங்கள் தகவலை நான் அதே பகுதியில் இணைத்துக் கொள்கிறேன்.