குமாரி மஞ்சுளா [கன்னட மஞ்சுளா]
தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், ஹொன்னேன ஹள்ளி என்ற இடத்தில் எம்.எச்.சிவாண்ணா – தேவரம்மா தம்பதிகளின் மகளாக 5.04.1951 அன்று பிறந்தார். இவரது தந்தை காவல் துறை, துணை ஆய்வாளராக பணியாற்றியவர். “ஹுடுஹாற்றடா ஹுடுகி” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்படத்தின் இயக்குநர் அமிர்தம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு அபிஷேக் என்ற ஒரே மகன். இது போக அபிநயா என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தார்.
ஆரம்ப காலங்களில் இவர் நாடகங்களில் நடித்து வந்தார். 1966-ஆம் ஆண்டில் “மனே கட்டி நோடு” என்ற கன்னடப் படத்தில் ஒரு சிறு வேடத்தில் அறிமுகமானார். இப்படத்தை இயக்கியவர் ஸ்ரீசத்குரு. 1972-ஆம் ஆண்டு “யாரா சாக்ஷி” என்ற படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குநர் எம்.ஆர்.விட்டல். பிரபலமான கதாநாயகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், ஸ்ரீநாத், சங்கர் நாக் ஆகியோர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் ஸ்ரீநாத்துடன் மட்டும் 35 படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் புதுவெள்ளம் படத்தில் சிவகுமாருடன் இணைந்து நடித்தார். எடுப்பார் கைப்பிள்ளை படத்தில் ஜெய்சங்கருடன் இணைந்து நடித்தார். கலைஞர் மு.கருணாநிதியின் தயாரிப்பில் “காலம் பதில் சொல்லும்“ படத்தில் சரத்பாபு இணையாக நடித்திருந்தார். இப்படம் 1980-இல் வெளிவந்தது. மேலும் சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் 12.09.1986 அன்று தற்கொலை செய்துகொண்டார்.
Source:-https://en.wikipedia.org/wiki/Manjula_(Kannada_actress)
”எடுப்பார் கைப்பிள்ளை “ 1975 படத்தில் ஜெய்சங்கருடன் குமாரி மஞ்சுளா
”எடுப்பார் கைப்பிள்ளை “ 1975 படத்தில் ஸ்ரீகாந்துடன் குமாரி மஞ்சுளா
”எடுப்பார் கைப்பிள்ளை “ 1975 படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலா, பி.பானுமதியுடன் குமாரி மஞ்சுளா
”எடுப்பார் கைப்பிள்ளை “ 1975 படத்தில் வீரராகவன், ஜெய்சங்கருடன் குமாரி மஞ்சுளா
“காலம் பதில் சொல்லும்“ 1980 படத்தில் சரத்பாபுவுடன் குமாரி மஞ்சுளா
குமாரி மஞ்சுளா அவர்கள் திருமணம் செய்து கொண்டது மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கருணாநிதி அவர்களின் நெருங்கிய உறவினரும் பல தமிழ் படங்களில் ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் பணியாற்றிய அமிர்தம் அவர்களையா…?…
விபரம் தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்…..
சுசீலா அம்மா அவர்களின் மெல்லிய குரலில் புதுவெள்ளம் படத்தில் இவர் பாடுவதாக வரும் துளி..துளி..துளி…துளி…. மழைத்துளி என்ற பாடல் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பாடலாகும்..
லலலா…..லலலா……லலலா…….லலலா….ம்ம்…….