’பசி’ சத்யா
மேடை நாடக நடிகையாக இருந்தவர். சத்யா அறிமுகமான படம் ‘நேற்று இன்று நாளை’. இப்படம் வெளியானது 1974-இல். 1979-ஆம் ஆண்டு ‘பசி’ என்ற படமே இவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. ’பசி’ திரைப்படத்தின் நினைவைக் கொஞ்சமும் அழிக்க முடியாதபடி தன் பெயருடனேயே அது ஒட்டிக் கொண்டிருப்பதைப் பெருமையாகவே நினைக்கிறார், ‘பசி’ சத்யா. இந்தப் படத்தில் ‘செல்லமக்கா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இக்கதாபாத்திரம் வெகுவாகப் பேசப்பட்டது. சிறந்த குணச்சித்திர நடிகை என்ற விருதும் கிடைத்தது.
இவரது சொந்த ஊர் மதுரை. திருமணம் சென்னையைச் சேர்ந்தவருடன் நடைபெற்றது. ’அன்பே சிவம்’, ’பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘முந்தானை முடிச்சு’, தூங்காதே தம்பி தூங்காதே’, ’மகளிர் மட்டும்’, ’வீடு’, “படிக்காத பண்ணையார்”, ‘வீரன் வேலுத்தம்பி’, ‘காதலில் விழுந்தேன்’ போன்ற இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். “அழகான ராட்சசி” என்று திரை வட்டாரத்தில் இவரை அழைப்பதுண்டு. இவரது நடிப்பை ரசித்து அனுபவித்த மூத்த நடிகை இப்பெயரை இவருக்குச் சூட்டினார். அம்முன்னணி நடிகை பி.பானுமதி ராமகிருஷ்ணா.
தற்போது இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கியிருக்கிறது. நடிகர் சங்கம் இவருக்கு “கலைச்செல்வம்” என்ற விருதை வழங்கியது.
வெளியிடப்பட்ட நேரம்:16:01 (04/10/2018)
“மாலையில் வெற்றி விழா… மதியம் ஷோபாவின் மரணச்செய்தி இடியா ஒலிச்சுது!” `பசி’ சத்யா
“`பசி’ படத்தின் 100-ம் நாள் வெற்றி விழா, 1980 மே 1-ம் தேதி மாலையில் நடக்கிறதா இருந்துச்சு. அன்றைக்கு மதியம் ஷோபா தற்கொலை செய்துகிட்டார். அந்த நிகழ்ச்சிக்குக் கிளம்ப இருந்தப்போ, ஷோபாவின் மறைவுச் செய்தி இடியாக ஒலிச்சது.”
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம் ஈர்த்தவர், `பசி’ சத்யா. திறமையான கலைஞராக இருந்தும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாதவர். தன் வாழ்க்கைப் பயணம் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார்.
“மதுரை என் பூர்வீகம். அம்மா, சங்கீத வித்வான். அப்பா, மத்திய அரசு ஊழியர். சினிமாவுக்கும் எனக்கும் வெகுதூரம். எதேச்சையா வாய்ப்பு கிடைச்சது. `பவளக்கொடி’ நாடகத்தின் மூலம் நடிப்புப் பயணம் ஆரம்பிச்சது. ஸ்கூல் படிச்சுக்கிட்டே பல நாடகங்களில் நடிச்சேன். பிறகு சென்னைக்கு வந்து நாடகங்களில் கவனம் செலுத்தினேன். 9 ம் வகுப்புக்குப் பிறகு படிக்கலை. எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பெரிய நடிகர்களின் முன்னிலையில் பல நாடகங்களில் நடிச்சேன். அப்போ ஓரளவுக்குப் புகழுடன் இருந்தேன்” என்கிற சத்யா, 2,000-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார்.
“பசி’’ 1979 படத்தில் ஷோபாவுடன் சத்யா
“பசி’’ 1979 படத்தில் விஜயனுடன் சத்யா
“படிக்காத பண்ணையார்” [1985] படத்தில் சத்யா
‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் நளினியுடன் சத்யா
“குடும்பம்” 1984 படத்தில் சத்யாவுடன் கல்லாபெட்டி சிங்காரம்
“வீட்டுக்கு ஒரு கண்ணகி” 1981 படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் பசி சத்யா
“ஆயிரம் முத்தங்கள்” 1982 படத்தில் லூஸ் மோகன் ராதாவுடன் பசி சத்யா
“சீறி வரும் காளை” 2001 படத்தில் ராமராஜனுடன் பசி சத்யா
”நான் பாடும் பாடல்” 1984 படத்தில் சத்யா
”எங்கள் தாய்க்குலமே வருக” 1986 படத்தில் ஜீவிதாவுடன் சத்யா
”காதோடுதான் நான் பேசுவேன்” 1981 படத்தில் என்னத்தே கன்னையா, ஐ.எஸ்.ஆருடன் பசி சத்யா
”அம்பிகை நேரில் வந்தாள்’’ 1984 படத்தில் மோகனுடன் சத்யா
“கரிமேடு கரிவாயன்” 1985 படத்தில் விஜயகாந்துடன் பசி சத்யா
“கரிமேடு கரிவாயன்” 1985 படத்தில் வினுசக்கரவர்த்தியுடன் பசி சத்யா
“கரிமேடு கரிவாயன்” 1985 படத்தில் நளினி, எம்.என்.நம்பியாருடன் பசி சத்யா
”மகளிர் மட்டும்” 1994 படத்தில் நாசர், ரோஹிணி, ரேவதியுடன் ’பசி’ சத்யா
50
in
Pasi Sathya and SS.Chandran in “Chinnanchirusugal” 1982 Tamil Movie
‘வைகறை பூக்கள்’ 1995 படத்தில் ’பசி’ சத்யா55
’ஒண்ணும் தெரியாத பாப்பா’ 1991 படத்தில் சிந்துவுடன் பசி சத்யா
’ஒண்ணும் தெரியாத பாப்பா’ 1991 படத்தில் சந்தானபாரதியுடன் பசி சத்யா
’மே மாதம்’ 1994 படத்தில் பசி சத்யா
’முயலுக்கு மூணு கால்’ 1979 படத்தில் வி.கே.ராமசாமியுடன் பசி சத்யா
’மீனாட்சித் திருவிளையாடல்’ 1989 படத்தில் மனோரமாவுடன் பசி சத்யா
பதிவு செய்த நேரம்:2013-12-11 16:00:48
முதல் திரைப்படத்தின் நினைவை கொஞ்சமும் அழிக்க முடியாதபடி தன் பெயருடனேயே அது ஒட்டிக் கொண்டிருப்பதை பெருமையாகவே நினைக்கிறார், ‘பசி’ சத்யா. தன் கலைப் பணியில் தன் உழைப்புக்கேற்ற வருமானம் பெற்று தன் குடும்பத்துப் பசி போக்க அருள் புரிவது இறைவன்தான் என்பது மறுக்க முடியாத உண்மை என்கிறார். வயிற்றுப் பசி என்பது தினந்தோறும் ஒருவருக்கு ஏற்படும் பிணிதான் என்று சொல்லும் இவர், ஆன்மிகப் பசி மட்டும் உள்ளத்தையும் உடலையும் மனதையும் உருக்குலைக்காமல் இருக்கும் அதிசயத்தில் மூழ்கிப் போகிறார்.
‘‘நம்பினார் கெடுவதில்லை, நான்குமறை தீர்ப்பு எனும் வாக்கியத்தை நான் மனமாற நம்பறேன். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு முருகன்னா ரொம்ப பிடிக்கும். முருகன் கோயில்களை தரிசனம் பண்ணிக்கிட்டே இருப்பேன். மலேசியாவில உள்ள பத்துமலை முருகனையும் லண்டன் முருகனையும் தரிசிக்க வேண்டும் என்று தீராத ஆவல். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கிட்டிருந்தேன். திடீரென குடும்ப நண்பர் ஒருவர் மூலம் அந்த இரு கோயில்களையும் தரிசிச்சது என் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம். இமயம் முதல் குமரி வரை அனேகமா எல்லா ஆலயங்களையும் தரிசனம் பண்ணியிருக்கேன்.
காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பெற்ற விஸ்வநாதர் படம், ஸ்படிக மாலை, ருத்ராட்சமாலை, என் அம்மா பூஜையறையில் வைத்து வழிபட்ட அஷ்டலட்சுமி படம், நடிகை நளினி தந்த நேபாள சாளக்ராமம் போன்றவை என் பூஜையறை பொக்கிஷங்கள். என் பூஜையறையில சுருட்டப்பள்ளி தாம்பத்ய தட்சிணாமூர்த்தி, திருப்பதி பெருமாள், ஆலங்குடி பெருமாள், சத்யநாராயணர், கிருஷ்ணர், தட்சிணாமூர்த்தி, திருப்பட்டூர் பிரம்மா போன்றோர் அருள் புரியறாங்க. என் கணவர் திருமண ஆண்டுவிழாவிற்கு பரிசாகத் தந்த வெள்ளி வெங்கடாஜலபதியும் இங்கே அமர்ந்து என் கவலைகளை ஆற்றுகிறார். காசியில் 10 நாட்கள் தங்கியிருந்தபோது சத்யா என்பது வெறும் உடல்.
அதில் உறையும் ஆத்மா வேறு என்பதை அனுபவபூர்வமா உணர்ந்தேன். அந்த 10 நாட்களிலும் நான் நானாகவே இல்லை என்பது அனுபவபூர்வமான உண்மை. திருப்பதி எனக்கு மிகவும் பிடித்த தலம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அங்கே நான் போய்விடுவேன். பெருமாளுக்கு எத்தனை உற்சவங்கள் உண்டோ அத்தனையையும் செய்து, மனம் நெகிழ்ந்திருக்கேன். மலையேறி நடந்து வந்து விரதம் இருந்து வரிசையில் நின்று பொறுமையாக அந்த கோவிந்தனை தரிசிக்கும் ஏழைகளின் பக்திக்கு ஈடு இணை ஏதும் இல்லை. புரட்டாசி மாத சனிக்கிழமைகள் முழுவதும் அவருக்கு என் வீட்டில் விசேஷ பூஜைகள் செய்வது என் வழக்கம். நவராத்திரியையும் விமரிசையாகக் கொண்டாடுவேன். வரலட்சுமி விரதத்தை விடாமல் கடைப்பிடித்து வருகிறேன்.
‘‘கடவுளிடம் நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம் தான்னு வேண்டிக்க மாட்டேன். வயசானா நோய்கள் வரத்தான் செய்யும். செல்வமும் வளரும், தேயும். அது அவரவர் கர்மவினை. அதைத் தாங்கிக்கற சக்தியைத் தான்னுதான் பிரார்த்தனை செய்வேன். என் கலைப் பணி சிறப்பாக அமையணும், பேரும் புகழும் நிலைக்கணும்னும் வேண்டிப்பேன். பிறருக்கு உதவி செய்யற மனம் வேணுங்கற பிரார்த்தனை கட்டாயம் உண்டு. எனக்கு ஆன்மிகம் பிடிக்கும்; டாம்பீகம் பிடிக்காது. நல்லாசி வழங்கும் பெரியவர்களை வணங்கி அவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதே இறையருள்தான் என்பது என்னோட அசைக்க முடியாத நம்பிக்கை.’’
நன்றி தினகரன் நாள் இதழ் – பசி சத்யா அவர்களின் ஆன்மீக பேட்டி
தற்போதைய தெனிந்திய நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியில் நீடிக்கின்றார்.தேர்தலிலும் போட்டி இடுகிறார்